தாம்பரம் காவல் நிலையத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் மகளிர் காவலர்கள் ஏராளமானோர் வண்ண உடைகளுடன் கலந்து கொண்டு கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.
பின்னர் தாம்பரம் காவல் நிலைய உதவி ஆணையர் சீனிவாசன், ஆய்வாளர் சார்லஸ் மற்றும் குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் மகளிர் காவலர்களின் பணிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களை ஊக்கபடுத்தி சிறப்புரையாற்றினர்.
அதனை தொடர்ந்து மகளிர் காவலர்கள் உட்பட அனைவருக்கும் மதிய உணவு வழங்கபட்டது.