தாம்பரம் எம்.சி.சி ஆர்.எஸ்.எல் பள்ளியின் 75 ஆம் ஆண்டு பவளவிழா
எம்.சி.சி கல்லூரி நிறுவனம் சார்பில் சேவை மனப்பான்மையுடன் துவங்கப்பட்ட எம்.சி.சி ஆர்.எஸ்.எல் உயர் நிலைப்பள்ளி 75 ஆம் ஆண்டு பவளவிழா நடைபெற்றது,
இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், எம்.சி.சி கல்லூரி முதல்வர் பி.வில்சன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
தனியார் பங்களிப்புடன் கணிணி லேப், வகுப்பறைகளை திறந்துவைக்கப்பட்ட நிலையில் பள்ளியில் மேம்பாட்டு பணிக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் வழங்குவதாக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அறிவித்தார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் இயக்குனர்கள் குழு உறுப்பினர், முனைவர். S.ஆல்பிரட் தேவபிரசாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 75 ஆம் ஆண்டு பவளவிழா கல்வெட்டினை திறந்து வைத்தார்.
மேலும் இவர்களுடன் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வர் முனைவர். பி. வில்சன் அவர்களும் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் நிதி காப்பாளர் சைரஸ் கல்லு புராக்கள் அவர்களும் தலைமை ஏற்று விழாவினை கௌரவித்தனர்.
இவ்விழாவினை ஏற்பாடு செய்து சிறப்புடன் நடத்தினார் அப்பள்ளியின் தாளாளர் முனைவர் கரோலின் விக்டோரியா.