வண்டலூர் பூங்காவில் தற்காலிக ஊழியர்கள் உள்ளிருப்பு ஆர்பாட்டம்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பயோமெட்ரிக் முறை,பணி நிரந்திரம் ,ஊழியர்களிடம் அவமரியாதையாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்காலிக ஊழியர்கள் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை சுமார் பத்து மணி நேரம் உள்ளிருப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் பூங்காவில் விலங்குகள் உணவின்றி தவித்தனர், குறிப்பாக பையோமெட்ரிக் முறையை உடனடியாக ரத்து செய்ய ஊழியர்கள் அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இன்று இரண்டாவது நாளாக வெள்ளிகிழமையும் தற்காலிக ஊழியர்கள் உள்ளிருப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் யானை, பாம்பு பன்னை, மீன்பன்னை ஆகியவை சுத்தம் செய்யாமல் இருப்பதால் பார்வையாளர்ருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top