Transgender murdered near Tambaram

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மப்பேடு புதூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநங்கை தீனதயாளன் (50)தெரு கூத்தில் நடித்து வருகிறார்.

நேற்று காலை உறவினர் திருநங்கையான சஞ்சனா கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் நடக்கவிருக்கும் தெரு கூத்தில் நடிப்பதற்காக தீனதயாளனை அழைத்த போது தனக்கு வேலை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பின்பு அவர் சித்தாலப்பாக்கம் அரசு மதுபான கடை அருகே உள்ள கழிவு நீர் குட்டையில் பலத்த வெட்டு காயங்களுடன் சடலம் இருப்பதாக சேலையூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் எண்ணை சோதனை செய்த போது திருநங்கை தீனதயாளின் வாகனம் என்பதும் அவர் மர்மநபர்களால் கொலை செய்யபட்டு இருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top