ஈகை பவுண்டேஷன்ஸ் சார்பாக
கல்வி உதவித்தொகை
ஈகை பவுண்டேஷன்ஸ் சார்பாக, 2022-23 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில்
அதிக மதிப்பெண் பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயிலும் வகையிலும் மேற்கொண்டு கல்லூரி படிப்பை தொடரும் வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அறிமுக கூட்டம் சிட்லபாக்கம் சர்வமங்களா நகரில் அமைந்துள்ள ஈகை பவுண்டேஷன்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவ மாணவியர், பெற்றோர்கள்,ஈகை பவுண்டேஷன்ஸ் நிறுவனர் வெ கண்ணன், வழக்கறிஞர் ஷங்கர் குற்றாலிங்கம் மற்றும் ஈகை அமைப்பின் தன்னார்வலர்கள் ஹர்ஷினி, சௌமியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு 95000 93853 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளவும்.