திருவஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

திருவஞ்சேரி ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சித் தலைவர் ஜனனி சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடைய கோரிக்கையான தண்ணீர் வசதி, கழிவுநீர் கால்வாய் ,சாலை அமைத்தல், பட்டா வழங்குதல் புதிய பள்ளி கட்டிடம் அமைத்தல், சமுதாய நலக்கூடம் அமைத்தல், பேருந்து நிலையம் அமைத்தல், மின்விளக்குகள் வசதிகள் போன்ற பல்வேறு விதமான கோரிக்கைகளை கேட்டு அறிந்து அதற்கான மனுக்களை பெற்று கொண்டு கோரிக்கைப் பணிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என்று பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top