தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வென்ற செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட வீரர்கள்

ஷிட்டோரியோ அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் ஆகஸ்ட் 6 மற்றும் 7 தேதிகளில் பெங்களூரில் அகில இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பல மாவட்டங்களில் இருந்து சுமார் 800 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்.

கத்தா மற்றும் குமுத்தே ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 26 மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர்.

கராத்தே மாஸ்டர்கள் போட்டியின் பிரிவில் சென்சாய் மகேஷ்குமார், சென்சாய் வெங்கடேஷ், சென்சாய் சங்கீதா, சதீஸ்குமார் மற்றும் சசிக்குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.

இப்போட்டியில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் 8 தங்க பதக்கமும், 8 வெள்ளி பதக்கமும் வென்றனர்.

ஷிட்டோரியோ அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ரென்ஷி ஜெய்குமார் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி கௌரவித்தார்.

ஷிட்டோரியோ அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் அகில இந்திய தலைவர் ரென்ஷி விஜயன் அவர்களின் தலைமையில் இப்போட்டியின் அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top