தாம்பரம்: சென்னை தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே தண்டவாள பராமரிப்பு பணிக்காரணமாக நாற்பத்தி நான்கு ரயில்கள் நேற்று காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டதால் செய்வதறியாது இருந்த பயணிகள் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது மாநகர பேரூந்துகளில் முண்டியடித்து ஏறிசென்றனர்,
நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் ரயிலில் பயணிப்பதற்க்க வந்த ஏராளமான பயணிகள் பேருந்தை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதால் கூட்ட நெரிசலாக காணப்பட்டது,
இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் கூட்டம் நெரிசலாக காணப்பட்டது.
இரு மார்கத்திலும் ஒரு கி.மீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்தை சீர் செய்ய முடியால் போலீசார் தவித்தனர்.