செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் (SRMIST) தொலைதூரக் கல்வியின் மூலம் மனித மேன்மைக்கான யோகாவில் டிப்ளமோ படிப்பை வெற்றிகரமாக முடித்த 23 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பணியாளர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக ஆவடி சிஆர்பிஎப் துணை ஆய்வாளர் திரு.எம்.தினகரன் கலந்து கொண்டார். மேலும், ஜிசி-ஆவடி, சிஆர்பிஎஃப் கமாண்டன்ட் திரு.நவீர் சிங் மற்றும் டிஐஜி, மெடிக்கல், ஜிசி, ஆவடி, சிஆர்பிஎஃப், டாக்டர் எஸ்.ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசகர், தொலைதூரக் கல்வி இயக்ககம் (DODE), SRMIST, பேராசிரியர் ஆர்.ராஜகோபால் வரவேற்றார்.