தாம்பரம்: பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் திட்டத்தின்படி நாடு முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டனர்.
அவ்வாறே தூய்மையான இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் மத்திய கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு தாம்பரம், ராஜகீழ்பாக்கத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா எண்.1 ஏ.எப்.எஸ் பள்ளியில் துணை ஆணையர் டி மணிவண்ணன் மற்றும் உதவி ஆணையர் வெள்ளைச்சாமி அவர்களின் தலைமையிலும் பள்ளி முதல்வர் சிரியக் மேரி அவர்களின் முன்னிலையில் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களுடன் இப்பணி செவ்வனே நடந்தேரியது.
![](http://tambaramspot.com/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-10-06-at-07.07.52-1024x485.jpg)
பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளியையும் அதன் சுற்றுப்புறத்தையும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டதோடு அல்லாமல் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தியின் கனவுப்படி தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் எங்கள் பங்கினை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.