கிழக்கு தாம்பரம் சுதானந்தபாரதி தெரு, பழைய ஜி.எஸ்.டி சாலையில் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றினார்கள்
தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம் சுதானந்தபாரதி தெரு, பழை ஜி.எஸ்.டி சாலை ஆகிய பகுதிகளில் சாலைகளில் ஓரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் சாலை குறுகலாக உள்ளதாக எழுந்த புகாரின் பேரில் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் அழகுமீனா உத்தரவின் பேரில் மாநகரமைப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் சுதானந்த பாரதி தெரு, பழைய ஜி.எஸ்.டி சாலை ஆகிய பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.
குறிப்பாக கடைகளின் முன்பாக ஆக்கிரமித்து கட்டப்பட்ட தாழ்வாரங்கள், பெயர் பலகைகள், கம்பி வேளிகளை அகற்றி சாலையை விரிவு படுத்தினார்கள்.