மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை மனுக்கள் அளிக்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறு குறு தொழில் துறை அமைச்சர் தா மோ.அன்பரசன், தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 63வது வட்ட மாமன்ற உறுப்பினர் ஜோதி குமார் கலந்துகொண்டு 63 வது வட்டத்தின் மின்சாரம் சம்பந்தப்பட்ட தேவைகள் குறைகள் நிவர்த்தி செய்ய வேண்டி, புதிய ட்ரான்ஸ்பார்மர் அமைப்பது, தாழ்வாக செல்லும் கேபில்களை கூடுதல் மின் கம்பங்கள் அமைப்பது, புதிய தெருவிளக்குகள் அமைப்பது, கோடைகாலங்களிலும் தொடர் மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு தனி தனியே மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.