Applications invited for scholarship for students

குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

2023-2024 ஆம் ஆண்டிற்கான பீடி / சுண்ணாம்புக்கல் / டோலமைட் சுரங்கங்கள் / திரைப்படத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி வழங்க ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2023-2024 ஆம் நிதி ஆண்டில், ரூ.1000/- முதல் ரூ.25000/- வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

https://scholarships.gov.in என்ற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.

ஒவ்வொரு மாணவருக்கும், மைய வங்கி அமைப்பு (கோர் பேங்கிங்) என்ற தொழில்நுட்பமுறையைக் கொண்டுள்ள, தேசியமயமாக்கப்பட்ட வங்கி/பட்டியலிடப்பட்ட வங்கியில் தங்களுக்கென தனியாக உள்ள சேமிப்புக் கணக்கு தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், தங்களின் ஆதார் எண்ணினை, தங்களின் சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவராக கருதப்படுவர்.

இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணினைப் பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top