CCTV footage of thief in action at a house in Tambaram

தாம்பரம்: தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (38) தேனாம்பேட்டையில் உளள் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 28 ம் தேதி விடுமுறை காரணமாக தனது குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முந்தினம் அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது வீட்டின் பின் கதவு உடைக்கபட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கபட்டிருந்த ஐம்பது சவரன் தங்க நகைகள் மற்றும் முப்பதாயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கபட்டது தெரிவந்துள்ளது.,

பின்பு காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் வீட்டினுள் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கையில் இரும்பு ராடுடன் வீட்டின் உள்ளே நுழையும் ஒரு நபர் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top