சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி தொழில்னுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அப்துல்கலாமின் உருவ சிலையை திறந்து வைத்தார்.
அப்போது சிறப்புரையாற்றிய அவர், அப்துல்கலாமின் சாதனைகள் மட்டுமின்ற் அவரது வாழ்க்கையே அனைவரையும் ஊக்கபடுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும், தனது துறையின் மூலம் மாடர்ன் இந்தியாவை உருவாக்கியவர் அவர் என்றும் கூறினார். மேலும் இந்திய புனித தன்மையை உணர்ந்த மிக உயரிய மனம் படைத்த அப்துல்கலாமின் உருவ சிலையை திறப்பதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
அதோடு , நம் நாட்டின் பிரச்சனைகள் சீராகி தேவைகளை பூர்த்தி செய்து அடைய வேண்டிய இலக்கை நம் நாடு அடைய குறிப்பிட்ட குழுவால் மட்டும் முடியாது , ஒவ்வொரு இந்தியரும் தங்களது தனி பங்களிப்பை அளித்தால் மட்டுமே அது சாத்தியம் என கூறிய அவர், நாம் ஏது செய்தாலும் அது தேசத்தை சார்ந்ததே என்ற என்னத்தோடு செயல்பட்டால் அப்போது அது சமூகத்திலும் வாழ்கையிலும் புதிய மனத்தினை அளிக்கும் என்றார்.