மூளையில் உள்ள 2 கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை சாதனை
சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் பெரும்பாக்கத்தில் உள்ள கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை மிகவும் சிக்கலான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய 2 மூளைக் கட்டிகளை சென்னையைச் சேர்ந்த 38 வயது நோயாளிக்கு அகற்றி சாதனை படைத்துள்ளது.
இம்மருத்துவமனையின் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, மிரர் இமேஜ் பாணியில் பேச்சாற்றலைக் கட்டுப்படுத்தும் மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களில் உள்ள 2 கட்டிகளை திறமையாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளனர்.
பொதுவாக, இந்த அறுவை சிகிச்சையானது மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் இந்த அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது நோயாளிக்கு பார்வை இழப்பை ஏற்படுத்தும். இது குறித்த பிரச்சினைகள் அவருக்கும் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை மிகவும் வெற்றிகரமான நடந்துள்ளது. இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை மொத்தம் 10 மணி நேரம் நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த 38 வயது இளைஞர் ஒருவருக்கு மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களில் மிகவும் அரிதான வகையில் இரு கட்டிகள் இருந்தன. இது 5 x 7 செ.மீ. அளவு இருந்தது. இந்த கட்டிகள் மூளையின் பெருமூளைப் பகுதியில் வலது மற்றும் இடது பக்கத்தின் பார்வை சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்தது. இந்த இளைஞர் 3 மாதமாக பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினையுடன் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு வந்தார்.
அவருக்கு இம்மருத்துவமனையின் டாக்டர். நைகல் பி சிம்ஸ் மற்றும் அவரது குழுவினர் மருத்துவ பரிசோதனை மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை போன்றவற்றை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு மூளையின் வலது மற்றும் இடதுபுறம் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை குறித்து அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மைக்ரோநியூரோசர்ஜரி, நேவிகேஷன் மற்றும் இன்ட்ராஆபரேட்டிவ் நியூரோமோனிட்டரிங் ஆகிய உயர்நிலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த அறுவை சிகிச்சையானது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் அவருக்கு தெளிவாக எடுத்துக்கூறப்பட்டது. கட்டிகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதன் காரணமாக பார்வை மோசமடைவது மற்றும் பிற பிரச்சினைகளும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், முதலில் நோயாளிக்கு பெருமூளையின் வலது புறத்தில் இருந்து கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய நிலையில் அவரது உடல்நிலை சீரற்ற நிலையில் இருந்தது. பின்னர் 5 நாட்களுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்கு அவர் தயாரான நிலையில், அவரது இடது பெருமூளையில் உள்ள கட்டி அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி நன்கு குணமடைந்ததோடு, மேலும் அவரது பார்வையில் 80 முதல் 90 சதவிகிதம் வரை நல்ல முன்னேற்றம் இருந்ததோடு, இரண்டு கண்களிலும் எந்தவித பிரச்சினையும் இல்லாத நிலையில் அவர் 4 நாட்களுக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.