தாம்பரம்: தொடர் விடுமுறை காரணமாக புறநகர் பகுதியில் வரிசை கட்டி நிற்க்கும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொது விடுமுறை மற்றும் ஆய்தபூஜை ,விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாடுகளுக்கு விடுமுறை.
இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பலர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்க்கு தங்களுக்கு ஏற்றார் போல் கார்கள்,ஆம்னி,அரசு பேருந்துகளில் பயணித்து செல்கின்றனர்.
மேலும் உள்ளூர்வாசிகள் சிலர் பண்டிகை தினதிற்க்காக புதிய துணிகளை வாங்குவதற்காக வணிக வாளாகத்திற்க்கு சென்று வரும் பொது மக்கள் தங்களின் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி வைப்பதால் பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் சாணடோரியம் முதல் வாகனங்கள் வரிசை கட்டியுள்ளனர்.
இதனால் இன்று மாலை முதல் பல்லாவரம்,தாம்பரம்,பெருங்களத்தூர்,
வண்டலூர் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.
போதிய போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாததால் போக்குவரத்தை சீர் செய்வதற்க்கு போலீசார் திணறி வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.