தாம்பரம்: இன்று தாம்பரம் மாநகராட்சி 65வது வார்டில் துப்புரவு பணியாளர்கள் கூட்டம் காலை ஏழு மணி அளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் 65 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சேலையூர் ஜி சங்கர் எம் சி அவர்கள் கலந்து கொண்டு வார்டில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சென்று குப்பைகளை எடுக்க வேண்டும், அது மட்டும் இல்லாமல் தெருக்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பர் கூறினார்.
மேலும் எந்தப் பகுதியில் இருந்தும் புகார்கள் வராமல் பணியாற்ற வேண்டும் அவ்வாறு புகார்கள் பெறப்படின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்பார்வையாளர் அனைத்து தெருக்களுக்கும் சென்று குப்பைகள் முறையாக எடுக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்