போக்குவரத்து நெரிசல் மிக்க பம்மல் சாலை விரிவாக்கம் குறித்து ஆய்வு நடைபெறுகிறது. ஆய்வுக்குபின் விரிவாக்கம் செய்யபடும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி
சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஜி.எஸ்.டி சாலை இந்திரா காந்தி சாலை சந்திப்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் சாலையை கடப்பதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் அங்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பில் அமைக்கபட்ட புதிய சிக்னலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், போக்குவரத்து நெரிசல் மிக்க பம்மல் சாலையை அகலபடுத்த தேவையான நிலம் கையபடுத்துவது இழப்பீடு வழங்குவது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், ஆய்வுக்குபின் சாலை விரிவாக்கம் செய்யபடும் என்றும், குன்றத்தூர் சாலையில் உள்ள சில ஆகிரமிப்புகளுக்கு மாற்று இடம் வழங்கியபின் விரிவாக்கம் பணிகள் தொடர்ந்து நடைபெரும் என்றார்.