எஸ் பி ஐ காலனி நேரு பூங்காவில் பூச்செடிகள்   நட்டு வைத்த பொதுமக்கள் 

தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கம் பகுதி 34 வது வட்டம் எஸ் பி ஐ காலனி நேரு பூங்கா மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா, மற்றும் தாம்பரம் மாநகராட்சி மூன்றாவது மண்டல தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் அவர்களிடம்  மாமன்ற உறுப்பினர் ஜெகன், முன்னாள் கவுன்சிலர் பிரதாப்  பொதுமக்கள்  மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பூங்கா சீரமைக்கப்பட்டு புதிதாக உடற்பயிச்சி செய்வதற்கான உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.  

சமீபத்தில் பிரதாப் அவர்களின்  அழைப்பை ஏற்று பூங்காவை சுற்றிலும் பல வண்ண பூச்செடிகளை சிறுமி பிரதீக்க்ஷா, சிறுவன் கெளசிக் மற்றும் சிலர் நட்டுவைத்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top