தனியார் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தனியார் பள்ளியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி ஆர். வி .அகாடமி நிறுவனர் ஜெகன் தலைமையில் ஜோசப் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஓசூர், திருவண்ணாமலை, மேல்மருவத்தூர் ,மகாபலிபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் போன்ற பல்வேறு பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ரவிச்சந்திரன், சந்தானம், கிறிஸ்டோபர் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top