தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதமாதா சாலை, அன்னை அஞ்சுகம் நகர் பகுதிகளில் வீடுகளை இழந்த 32 பேருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், அன்னை அஞ்சுகம் நகர் திட்டப் பகுதியில் குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆணையை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா பயனாளர்களுக்கு வழங்கினார்.