தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம்
தாம்பரத்தில் உலக மகளிர் தினத்தில் முன்னிட்டு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் தியாகராஜன் தலைமையில் மகளிர் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தாம்பரம் தனியார் பள்ளியில் நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முன்னேற்ற கழக மாநில தலைவர் தியாகராஜன் அவர்களின் தாயார் ராதாபாய் குப்புசாமி மற்றும் தேர்வு வாரியம் இணை இயக்குனர் சுகன்யா, லக்ஷ்மன் சுதி பாடகி மாலதி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.