State Level Chess competition held at Madambakkam

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தனியார் பள்ளியில் இரண்டாவது மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் மாநில அளவிலான மாணவ, மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி அன்னை அருள் பள்ளி, மற்றும் ஆர்.வி.செஸ் அகாடமி இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜோசப் செல்வகுமார் கிறிஸ்டோபர் ஆண்டனி தலைமையில், ஆர்.வி. செஸ் அகடமி நிறுவனர் வி. ஜெகன் முன்னிலையில் நடைபெற்றது.

எட்டு வயது முதல் 16வயது வரை மாணவ மாணவிகள் ஓசூர், திருவண்ணாமலை , மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, கோவை சென்னை, பீகார், கர்நாடகா போன்ற பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த சதுரங்கபோட்டியில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் விளையாடினர்.

மேலும் நூற்றுக்கு மேற்பட்ட வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் செஸ் அகாடமி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top