மத்திய அரசு விருது பெற்ற தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள காச னாய் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவிக்கும் விதமாக மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவமனை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் வினோத் குமார், நிலைய மருத்துவ அலுவலர் ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.