தாம்பரம் மாநகராட்சி ஐந்தாவது மண்டலம், 45வது வார்டு வேளச்சேரி சாலையில் அமைந்துள்ள சேலையூர் அரசு மேல்நிலை பள்ளியை 5 வது மண்டல குழு தலைவர் எஸ் இந்திரன், மாமன்ற உறுப்பினர் கொடி தாமோதரன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது பள்ளியில் உள்ள வகுப்பறை வசதிகள், மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகளை குறித்து உதவி தலைமை ஆசிரியையிடம் கேட்டனர்.
பின்பு அங்கு நடைபெற்று வரும் கம்யூட்டர் மையத்தின் கட்டிடத்தின் மேற் தளம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டனர்.