தாம்பரம் பகுதிகளில் தரமற்ற பாணி பூரி விற்பனை
தாம்பரம் – வேளச்சேரி சாலை, தாம்பரம் – ஜிஎஸ்டி சாலை ஆகிய இந்த இரண்டு சாலைகளிலும் ஆங்காங்கே பானி பூரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு சாலைகளிலும் பானிபூரி விற்பனை செய்பவர்கள் கெட்டுப்போன உருளைக்கிழங்கு மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனைக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதை உண்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு வாந்தி உள்ளிட்ட உடல் பாதைகள் ஏற்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவனித்து இந்த இரண்டு சாலைகளிலும் உள்ள பானிபூரி கடைகளில் வாரம் ஒரு முறை சுழற்சி முறையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது