Fire service personnel rescue cow from well

உரை கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர்

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள தனி நபருக்கு சொந்தமான காலி மனையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று திறந்த நிலையில் இருந்த 10 அடி ஆழம் கொண்ட உரை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இதனால் மேலே ஏறுவதற்காக திணறிய பசு மாடு தொடர்ந்து சத்தம் எழுப்பியதால் அங்கு கூடிய அப்பகுதியை சேர்ந்த நபர்கள் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் பசுமாட்டை மேலே தூக்குவதற்க்கு முற்பட்டனர் ஆனால் மாட்டின் எடை அதிகமாக இருந்ததால் முயற்ச்சியை கைவிட்டனர்,

பின்பு தண்ணீர் லாரி மூலம் உரை கிணற்றில் தண்ணீரை நிரப்பி பசு மாட்டை போராடி கயிற்றின் மூலம் வெளியே கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top