தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
சார்பாக சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த மருத்துவ நிறுவனத்தில் பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யோகா ஆசிரியர் டாக்டர் எஸ் பேச்சியம்மாள் மற்றும் குழுவினர் தலைமையில் நடைபெற்ற அமர்வில் சித்தர்களின் யோகாசனங்கள் முதலியவை இடம்பெற்றிருந்தன.
ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்களுடன் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 25 காவல்துறையினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.