வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும்
குடியிருப்பு கட்டிடம் திறப்பு விழா
தாம்பரம் மாநகராட்சி மண்டலம்-5, வார்டு 64 ல் தாம்பரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மதிப்பீடு: 22,44,688 /- ஆண்டு: 2021 – 2022 வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புதிய அலுவலகத்தையும், குடியிருப்பு கட்டிடத்ததையும் திறந்து வைத்தார்.
உடன் மண்டல குழுத்தலைவர்கள் எஸ் இந்திரன், டி காமராஜ், ச ஜெயபிரதீப் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் ஷாகில ஜான்சி மேரி ரமணி ஆதிமூலம், பி ஜோதிகுமார், கொடி ஆர் தாமோதரன், சி சுரேஷ், சசிகலா கார்த்திக், சி ஜெகன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் வி முனுசாமி, கி வேல்மணி, சீனிவாசகுமார், திருவஞ்சேரி சுரேஷ், பிரதாப், ரமேஷ் பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிட்லபாக்கம் இரா.விஜயகுமார், உள்ளிட்ட திமுக வட்ட செயலாளர்கள், பகுதி திமுக நிர்வாகிகள், கழக தோழர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.