Parali Su Nellaiappar’s 53rd anniversary to be observed in Chrompet

குரோம்பேட்டையில் பரலி சு.நெல்லையப்பர்
53-வது நினைவு நாள்  புகழஞ்சலி

வ.உ.சி, பாரதியாரின் உற்ற தோழர்  குரோம்பேட்டை பாரதிபுரம்  தந்தை என்று அழைக்கப்படும் பரலி சு.நெல்லையப்பர் அவர்களின் 53-வது நினைவு நாள்
புகழஞ்சலி 28 மார்ச் காலை 8.00 மணிக்கு குரோம்பேட்டை நெல்லையப்பர் சிலை வளாகம், பேருந்து நிலையம் அருகில் நடைபெறும்.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் வள்ளிநாயகம் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகிப்பார். சிறப்பு விருந்தினராக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்
கருணாநிதி கலந்து  கொள்வார். மாநகராட்சி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அறிஞர் பெருமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சமுதாய தலைவர்கள், நலச்சங்க நிர்வாகிகள் புகழஞ்சலி செலுத்துவார்கள்.

க மீனாட்சி சுந்தரம் பிள்ளை , தலைவர், உலகத் தமிழ் சைவப் பெருமக்கள் சங்கம், முத்துக்குமாரசாமி, மனித நேய அறக்கட்டளை, இளசை கிருஷ்ணமூர்த்தி   செயலாளர், பாரதியார் -நெல்லையப்பர் மன்றம்,
நிர்வாகிகள், கார்காத்தார் சங்கம், குரோம்பேட்டை, நிர்வாகிகள், பாரதிபுரம் மக்கள் நலச்சங்கம், நிர்வாகிகள், தமிழ்நாடு வ.உ.சி. நலப்பேரவை, கே.கே.நகர் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top