Save Lakes awareness walkathon held in Chitlapakkam

Chitlapakkam: தாம்பரம் அருகே ஏரிகளை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

சகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளை காப்போம் என்ற தலைப்பில் சிட்லப்பாக்கம் ரைசிங் சார்பில் விழுப்புணர்வு பேரணி நடைபெற்றது,

இதனை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார்,

இதில் பள்ளி,கல்லூரி மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முக்கிய சாலையான சிட்லப்பாக்கத்தில் இருந்து எம்.ஐ.டி மேம்பாலம் வரை சுமார் இரண்டு கிலோ மீட்டர் கைகளில் பதாகைகளை ஏந்தி ஏரியை காப்போம் என்ற கோசங்கள் இட்டபடி பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் பேரணியில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்று கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top